58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 2
பகைவர்களையும் இயல்பாகவே வெல்லவல்ல
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:45 PM
வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும்
சொல வலான் சுழலும் தடுமாற்றமும்
அல வலான் மனை ஆர்ந்த மென் தோளியைக்
கல வலான் கடம்பூர் கரக் கோயிலே
விளக்கம்
அலவலான் = இயல்பாகவே நீங்கியவன்.
Advertisement
பொழிப்புரை
ஐந்து புலன்களையும் தனது பகைவர்களையும் இயல்பாகவே வெல்லவல்ல சிவபெருமான் வேதங்களை உலகுக்கு எடுத்து உரைக்க வல்லவன். அவன், மயக்கத்தை ஏற்படுத்தும் அறியாமையையும் தடுமாற்றத்தைத் தோற்றுவிக்கும் சந்தேகத்தையும் நமது மனங்களிலிருந்து நீக்க வல்லவன் ஆவான். தனது மனையாளாகிய, மெல்லிய தோள்களை உடைய பார்வதி அன்னையை, தனது உடலுடன் கலந்த நிலையில், உடலின் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ள வல்ல அவன் விருப்பத்துடன் உறையும் இடம் கடம்பூர் கரக்கோயிலாகும்.