முகப்பு
தினம் ஒரு தேவாரம்

58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 5

மலையினில் தானே தோன்றிய

Updated On : 15 ஏப்ரல், 2017 at 11:17 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:45 PM

சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரி சடைக்
கனையும் பைங்கழலான் கரக் கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே
 

விளக்கம்

சுனை = மலையினில் தானே தோன்றிய நீர்நிலை. நீல மலர் = கருங்குவளை மலர். புனையும் = அணியும். கனையும் = ஒலிக்கின்ற.

Advertisement

பொழிப்புரை

மலையினில் தானே தோன்றிய நீர் நிலையில் பூக்கும் குவளை மலர் போன்று, கருமை நிறத்தினை கழுத்தினில் உடையவன் சிவபெருமான். பொன் நிறத்தில் காணப்படும் கொன்றை மலரைத் தனது சடையில் அணிபவனும், பசும்பொன்னினால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்குமாறு நடனம் ஆடுபவனும் ஆகிய பெருமான் உறையும் கடம்பூர் திருக்கோயிலை உள்ளத்தினில் நினைக்கும் அடியார்களின் வினைகள், பெருமானின் அருளால் நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.