முகப்பு
தினம் ஒரு தேவாரம்

72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 9

நடனமாடும் தூயவனை

Updated On : 6 ஜனவரி, 2018 at 3:06 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:16 PM


பாடல் 9:
    வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்
    பூதம் பாட நின்றாடும் புனிதனார்
    ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று
    பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே

 
விளக்கம்:
ஏதம்=துன்பம்: பறையும்=நீங்கும்:

பொழிப்புரை:
வேதங்களை ஓதும் விரிசடை அண்ணலாகிய சிவபெருமானை, பூதங்கள் சூழ நிற்க நடனமாடும் தூயவனை, எங்களது துன்பங்களைத் தீர்க்கும் இடைமருது ஈசனே என்று நாம் அவனது திருப்பாதங்களைத் தொழுது வணங்கினால் நமது பாவங்கள் நம்மை விட்டு நீங்கும். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.