72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 9
நடனமாடும் தூயவனை
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:16 PM
பாடல் 9:
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாட நின்றாடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று
பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே
விளக்கம்:
ஏதம்=துன்பம்: பறையும்=நீங்கும்:
பொழிப்புரை:
வேதங்களை ஓதும் விரிசடை அண்ணலாகிய சிவபெருமானை, பூதங்கள் சூழ நிற்க நடனமாடும் தூயவனை, எங்களது துன்பங்களைத் தீர்க்கும் இடைமருது ஈசனே என்று நாம் அவனது திருப்பாதங்களைத் தொழுது வணங்கினால் நமது பாவங்கள் நம்மை விட்டு நீங்கும்.
Advertisement