முகப்பு
தினம் ஒரு தேவாரம்

100. படையார் தருபூதப் - பாடல் 9

திருநீறு பூசப்பட்டதால்

Updated On : 30 ஜூன், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:34 PM

பாடல் 9:

    மறையான் நெடுமால் காண்பரியான் மழு ஏந்தி
    நிறையா மதி சூடி திகழ் முத்தின் தொத்தே
    இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட
    கறையார் மிடற்றானைக் கருதக் கெடும் வினையே

விளக்கம்:

Advertisement

நிறையா மதி=கலைகள் குறைந்த பிறைச் சந்திரன் தொத்து=குவியல்; திருமேனி முழுவதும் திருநீறு பூசப்பட்டதால் வெண் முத்தின் தொகுப்பாக இருக்கும் திருமேனியை உடைய இறைவன், நெல்வாயில் அரத்துறை தலத்தில் சம்பந்தர்க்கு முத்துச் சிவிகை அளிக்க இருக்கும் நிகழ்ச்சி அடுத்து வரப் போவதை முன்னமே உணர்த்தும் குறிப்பு.   

பொழிப்புரை:

வேதங்கள் ஓதும் மறையவனாகிய பிரமனும், ஓங்கி உலகளந்த நெடிய உருவினைக் கொண்ட திருமாலும் காண்பதற்கு அரியவனாக திகழ்ந்தவனும், மழுப் படையை ஏந்தியவனும், இளம் பிறைச் சந்திரனை சடையில் அணிந்து கொண்டு சந்திரன் தேய்ந்து அழியாமல் காத்து அருள் புரிந்தவனே, முத்தின் குவியல் போன்ற திருமேனியை உடையவனே, என்று பலவாறு போற்றி, எருக்கத்தம்புலியூர் உறைகின்ற கறைமிடற்று அண்ணலை நினைக்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் கெட்டுவிடும்.  

Audio
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.