தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி காரணமாக தென்காசியில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி காரணமாக தென்காசியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இதனால், தென்காசியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக தபால் வாக்கு செலுத்த சிறப்பு மையமும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tn Election 2026 Holiday for schools in Tenkasi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.