முகப்பு
தினம் ஒரு தேவாரம்

147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 3

நறுமணம் கமழும் வில்வம்

Updated On : 10 டிசம்பர், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 7:04 PM

பாடல் 3:

    நாறு கூவிள நாகு இள வெண்மதி அத்தோடு
    ஆறு சூடும் அமரர் பிரான் உறை கோயில்
    ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
    தாறு தண் கதலிப் புதல் மேவு சாய்க்காடே
 

விளக்கம்:

நாறு=நறுமணம்; கூவிளம்=வில்வம்; தேன்கனி=முற்றின தேங்காய்; தாறு=குலை; புதல்=புதர்; ஊறு=சுவை ஊறுகின்ற; மணற்பாங்கான கடற்கரை தலத்தில் தென்னந்தோப்புகள் இருப்பது இயற்கை அல்லவா.

Advertisement

பொழிப்புரை:

நறுமணம் கமழும் வில்வம், இளைய பிறைச் சந்திரன் மற்றும் கங்கை நதி ஆகியவற்றைத் தனது சடையினில் சூட்டிக் கொள்பவனும் தேவர்களின் தலைவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் சாய்க்காடு தலத்தினில் உள்ளது. சுவை ஊறுகின்ற தேங்காய், மாங்கனி இவற்றை கொண்டுள்ள மரங்கள் உயர்ந்து ஓங்கி இருப்பதும் குளிர்ந்த வாழைப் பழத் தாறுகளை உடைய வாழைப் புதர்களும் பொருந்திய தலம் சாய்க்காடு தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.