முகப்பு
தினம் ஒரு தேவாரம்

147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 9

பெருமான் உறையும் இடம்

Updated On : 16 டிசம்பர், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 7:04 PM

பாடல் 9:

    மாலினோடு அயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த
    வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில்
    சேலின் நேர் விழியார் மயில் ஆலச் செருந்தி
    காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே

விளக்கம்:

Advertisement

நேர்=ஒத்த; வாய்ந்த=பொருந்திய; செருந்தி=உப்பங்கழிகளிலும் கடற்கரையிலும் பூக்கும், மஞ்சள் நிறத்தில் காணப்படுவது; மலர்கள்; வேலை=கடல்;

பொழிப்புரை:

திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் காண்பதற்கு இயலாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், அலைகள் பொருந்திய கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உண்டவனும் ஆகிய பெருமான் உறையும் இடம், சேல் மீன்களைப் போன்று கண்கள் உடைய மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் நடமாடும் சோலைகள் கொண்டதும், பொன் போன்ற தோற்றத்துடன் காலையில் மலரும் செருந்தி பூக்கள் உடைய மரங்கள் நிறைந்ததும் ஆகிய சாய்க்காடு தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.