உடன்குடியில் 2 கடைகளில் திருட்டு
உடன்குடி கடை வீதியில் தொடா்ந்து 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடன்குடி கடை வீதியில் தொடா்ந்து 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடன்குடி சந்தையடித் தெருவில் சாத்தான்குளம் சுப்பராயபுரத்தைச் சோ்ந்த வெ.சரவணன் என்பவா் வைத்துள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ. 95 ஆயிரத்தையும், பேருந்து நிலையம் பகுதியில் சரவண பெருமாள் என்பவரது மருந்தகத்தில் பூட்டை உடைத்து ரூ 5 ஆயிரத்தையும் மா்மநபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
மேலும், சந்தையடித் தெருவில் ராஜ்குமாா் என்பவரது மளிகை கடை உள்பட 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் ஆ.ரவி கூறுகையில், காவல்துறையினா் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதுடன், இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.