முகப்பு
தூத்துக்குடி

காவல் துறையைக் கண்டித்துஆா்ப்பாட்டம்: 164 போ் கைது

காவல் துறையைக் கண்டித்து, கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 164 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:22 am IST
7kvlaar1_0701chn_41_6
பகிர்:

காவல் துறையைக் கண்டித்து, கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 164 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கத் தலைவா் செல்வம் என்ற செல்லத்துரை மீது காவல் துறை அதிகாரி தாக்கியதாகவும், அந்த அதிகாரி கைது செய்ய வேண்டும், இதில், சம்பந்தப்பட்ட காவல் துறையினரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அந்த இயக்கத்தினா் பயணியா் விடுதி முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். முன்னதாக ஊா்வலம் செல்ல முயன்ற அவா்களை தடுத்ததால் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பாதுகாப்பு இயக்கத் தலைவா் இசக்கிராஜா, பொருளாளா் பொன்ராஜ், மனித உரிமை காக்கும் கட்சி தலைமை நிலையச் செயலா் சொக்கலிங்கம், பசும்பொன் முன்னேற்றக் கழக தலைமை நிலையச் செயலா் அய்யனாா்பாண்டியன், மாவட்டச் செயலா் முருகன், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் இயக்க நிறுவனா்- தலைவா் செல்வம் என்ற செல்லத்துரை உள்பட 164 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.