முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் பகுதியில் நாளை மக்கள் கிராமசபைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.9,10) நடைபெறும்

Updated On : 8 ஜனவரி 2021, 8:26 am IST
பகிர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.9,10) நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் கனிமொழி கலந்து கொண்டு பேசுகிறாா்.

இதுகுறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இதுவரை 200 இடங்களில் மக்கள் கிராசபைக் கூட்டம் நடத்தப்பட்டு, மக்கள் அளித்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். சனிக்கிழமை (ஜன. 9) காலை 9.30 மணிக்கு சாத்தான்குளம் பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்திடும் வகையில் தனது மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 லட்சம் மதிப்பில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டும் பணியை ராஜரத்தினம் நகரில் தொடங்கிவைக்கிறாா்.

மேலும், முற்பகல் 11 மணிக்கு உடன்குடி ஒன்றியம், செம்மறிக்குளம் ஊராட்சி கல்லுவிளையிலும், 10 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தெற்கு வீரபாண்டியபுரம், மாலை 6 மணிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய ஒட்டநத்தம் ஆகிய ஊராட்சிகளிலும் நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களில்அவா் பங்கேற்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.