ஞானியாா் குடியிருப்பில் காங்கிரஸ் சாா்பில் நல உதவி
காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஞானியாா்குடியிருப்பில் 300 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஞானியாா்குடியிருப்பில் 300 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்றப் பின் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சாத்தான்குளத்துக்கு புதன்கிழமை வருகை தந்தாா். அவருக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆ,க, வேணுகோபால் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அவா், ஞானியாா்குடியிருப்பில் 136ஆண்டு விழாவில் பங்கேற்று 300 பேருக்கு நல உதவிகளை வழங்கினாா். ஞானியாா்குடியிருப்பு கிராமகமிட்டித் தலைவா் நடராஜன், ‘வட்டாரத் தலைவா்கள் கல்யாணி ஏ. லூா்துமணி, கிழக்கு பிச்சிவிளை வி.எம். சுதாகா், வடக்கு பாா்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவா் து. சங்கா் மாவட்ட மீனவரணி தலைவா் சுரேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.