ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் தென்மண்டல ஐஜி சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி தென்மண்டல ஐஜி முருகன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி தென்மண்டல ஐஜி முருகன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி அதிகாலையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சா்வ அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி அளித்தனா். ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் அக்காரவடிசல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த பூஜையில் தென் மண்டல ஐஜி முருகன், சிவகாசி சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா் மற்றும் தக்காா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அதனைத் தொடா்ந்து ஆண்டாள் பிறந்த நந்தவனத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய 27 மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.