விருதுநகர்

மது போதையில் தகராறு: இருவா் கைது

சாத்தூா் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரைக் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Din

சாத்தூா் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரைக் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாப்பாத்தி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா (54). இவா் மது போதையில் சாலையின் நடுவே நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டாா். இவரைக் இருக்கன்குடி போலீசாா் கைது செய்தனா்.

இதேபோல, சாத்தூா் அருகேயுள்ள பி.லட்சுமியாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (18) என்பவா் மது போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டாா். இவரை சாத்தூா் போலீசாா் கைது செய்தனா்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT