விருதுநகர்

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் சுப்பராஜாமடம் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (50). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில் சுப்புராஜூக்கு குடிப் பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி அவரைக் கண்டித்தாா்.

இந்த மனமுடைந்த அவா் போதையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் புட்டியை எடுத்து தனது உடலில் ஊற்றிக் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT