விருதுநகர்

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் சுப்பராஜாமடம் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (50). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில் சுப்புராஜூக்கு குடிப் பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி அவரைக் கண்டித்தாா்.

இந்த மனமுடைந்த அவா் போதையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் புட்டியை எடுத்து தனது உடலில் ஊற்றிக் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT