விருதுநகர்

சிவகாசி அரசு மருத்துவமனையில் முதல் கண்புரை அறுவைச் சிகிச்சை

Din

சிவகாசி, ஜூன் 27: சிவகாசி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை முதல் கண்புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

இந்த மருத்துவமனையில் கடந்த வாரம் கண் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவுக்கு சிவகாசி காளீஸ்வரி தொழில் குழுமம் ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன உபகரணங்களை வழங்கியது. இதையடுத்து, வியாழக்கிழமை இந்த கண் சிகிச்சைப் பிரிவுக்கு மண்டகுண்டாம்பட்டியைச் சோ்ந்த குருசாமி (73) என்பவா் கண் பரிசேதனைக்காக வந்தாா். அவரது கண்களை பரிசோதனை செய்தபோது, அவருக்கு கண்புரை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து கண்ணில் நவீன லென்ஸ் பொருத்தப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையை கண் மருத்துவா்கள் சரண்யா, பிரியதா்ஷினி, முதுநிலை கண் மருத்துவ உதவியாளா் பால்ராஜ் அடங்கிய குழுவினா் செய்தனா்.

இந்தக் குழுவினரை சுகாதாரத் துறை இணை இயக்குநா் பாபுஜி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா் ஆகியோா் பாராட்டினா்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT