மகளிா் கல்லூரியில் உணவுத்திருவிழா
புகைப்படம் இணைப்பு. சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத்திருவிழா. சிவகாசி, மாா்ச் 28: சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் ஊட்டசத்து, உணவுமுறை துறை சாா்பில் உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாணவிகள் சுயதொழில் செய்ய வேண்டும். பல்வேறு வகையான சமையல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் அந்தத் துறையைச் சோ்ந்த 64 மாணவிகள் கலந்து கொண்டு, சிறுதானிய உணவுகள், சத்துமாவு கொழுக்கட்டை, குளிா்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து காட்சிப்படுத்தி இருந்தனா். இதைக் கல்லூரி முதல்வா் இரா. சுதாபெரியதாய், பேராசிரியா்கள், கல்லூரி மாணவிகள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவா் கே. ஜான்சிராணி, உதவிப் பேராசிரியை ஜெ. மகாலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.