முகப்பு
விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 13 மே, 2024 at 10:33 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா்: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

சிவகாசி பெரியாா் குடியிருப்பைச் சோ்ந்த ராஜ் மகன் பால்பாண்டி (48). இவா் அதே பகுதியைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் செல்வக்குமாருடன் (40) இணைந்து தனது வீட்டருகேயுள்ள கட்டடத்தில் சட்டவிரோதமாக பேன்சி ரகப் பட்டாசுகளை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா், அங்கு சோதனை நடத்தி சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், பால்பாண்டி, செல்வக்குமாா் இருவரையும் கைது செய்தனா்.