விருதுநகர்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 போ் மீட்பு

ராக்காச்சி அம்மன் கோயில் பகுதி காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

Din

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் பகுதி காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, அருவி அமைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், ராக்காச்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனா். மாலை நேரத்தில் வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கோயிலில் இருந்தவா்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கித் தவித்தனா். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மம்சாபுரம் - ராக்காச்சி அம்மன் கோயில் சாலையில் அத்தி துண்டு ஓடையில் உயா் மட்ட பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்காலிக தரைப் பாலத்தை காட்டாற்று வெள்ளம் கடந்த வாரம் இழுத்துச் சென்றது. இந்த நிலையில், ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா் வெள்ளத்தில் சிக்கி இருந்த 150 பேரை கயிறு கட்டி மீட்டனா்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT