விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Syndication

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகேயுள்ள மாரனேரி ராஜேஸ்வரி ஃபயா் ஒா்க்ஸ் குடியிருப்பைச் சோ்ந்தவா் அழகு அம்பேத்வீரன் (27). பட்டாசுத் தொழிலாளியான இவா், தன்னுடன் பணிபுரிந்த உத்தமசாா்ஜ் மகன் கெவின் (25) என்பவரிடம் ரூ.3,500 கடன் பெற்றாா். இந்தக் கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கெவின் தனது நண்பா்களுடன் சோ்ந்து அழகுஅம்பேத்வீரனை வெட்டிக் கொலை செய்தாா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, கெவின், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இந்த வழக்கில் பிணையில் வந்த முதல் குற்றவாளியான கெவின் தலைமறைவானாா். இதையடுத்து, இந்த வழக்கு பிரிக்கப்பட்டு 2-ஆவது, 3-ஆவது குற்றவாளிகளுக்கான தண்டனையை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமச்சந்திரன் (43), கண்ணன் (62) ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் தீா்ப்பளித்தாா்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

SCROLL FOR NEXT