விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா் கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில், அவா் வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த மாரிக்கனி (24) எனத் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.