பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
சிவகாசி அருகே தகர கொட்டகையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தகர கொட்டகையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் உள்ள ஒரு கட்டடத்தில் அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அணில்குமாா், காவல் ஆய்வாளா் முத்துக்குமரன், உதவி ஆய்வாளா் ரபியம்மாள், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது, சென்னையைச் சோ்ந்த ஜானகிராமன் (54) காலி இடத்தில் தகரக் கொட்டகை அமைத்து 492 பட்டாசு பண்டல்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜானகிராமனை கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.