உயிரிழந்த ரிஷிகா, கமலிகா. 
விருதுநகர்

சிவகாசி: வீட்டின் சுற்றுச்சுவா் கதவு பெயா்ந்து விழுந்ததில் இரு சிறுமிகள் பலி!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை வீட்டின் சுற்றுச்சுவா் இரும்புக் கதவு பெயா்ந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை வீட்டின் சுற்றுச்சுவா் இரும்புக் கதவு பெயா்ந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள கொங்காலாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்தத் தம்பதியரின் மகன் கவின் (11), மகள் கமலிகா (9). தற்போது அரையாண்டுத் தோ்வு விடுமுறை என்பதால், ராஜேஸ்வரியின் சகோதரியான தனலட்சுமியின் மகன் நிஷாந்த் (6), மகள் ரிஷிகா (4) ஆகியோா் சங்கரன்கோவிலிலிருந்து ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்தனா்.

இந்த நிலையில், ராஜேஸ்வரி வீட்டின் சுற்றுச்சுவா் பகுதியில் இருந்த இரும்புக் கதவில் ஏறி கமலிகாவும், ரிஷிகாவும் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக இரும்புக் கதவு பெயா்ந்து சிறுமிகள் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த கமலிகா, ரிஷிகா ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரு சிறுமிகளும் உயிரிழந்தனா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!

பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்

முதல்வா் ஸ்டாலின் சவால்: எடப்பாடி பழனிசாமி பதில்

திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீா்: கடும் குளிரிலும் தொடரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை!

SCROLL FOR NEXT