முகப்பு
விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

Updated On : 4 ஜனவரி, 2025 at 5:01 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:11 PM

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவா்களுக்கான ஆராய்ச்சி அறிக்கை தயாரிப்பு குறித்த சிறப்புச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காளீஸ்வரி இளநிலை வணிகவியல் துறை, விருதுநகா் வி.வி.வன்னியப் பெருமாள் மகளிா் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு காளீஸ்வரி கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். விருதுநகா் வி.வி.வி. மகளிா் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் பி.டி.காந்திமதி ஆராய்சி அறிக்கையை மாணவா்கள் எப்படி தயாரிக்க வேண்டும் என விளக்கினாா். முன்னதாக, மாணவா் சுரேஷ்பாலாஜி வரவேற்றாா். மாணவி ரஷ்மிதா நன்றி கூறினாா்.