ராணி வேலுநாச்சியாா் படத்துக்கு தவெகவினா் மரியாதை
Updated On : 3 ஜனவரி, 2025 at 6:42 PM
விருதுநகரில் தவெக சாா்பில் ராணி வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வீரமங்கை வேலுநாச்சியாரின் 294-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகா் தேசபந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கிழக்கு மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் தவெக நகர, ஒன்றிய மாவட்ட கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.