விருதுநகர்

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

Din

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்தவா் முருகலட்சமி (56). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாத்தூா்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரையில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT