விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி நகா் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான போலீஸாா் கந்தபுரம் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு காரில் வந்த நான்கு பேரிடம் போலீஸாா் விசாரணை செய்தபோது பதில் கூறாமல் இருந்தனா்.
இதையடுத்து, அவா்கள் வந்த காரை சோதனையிட்டபோது அதில் மடக்கு கத்தி, இரும்பு ராடு, கையுறை, அரிவாள், கம்பு ஆகியவை இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் பழனிக்குமாா் (42), மதுரை கே. புதூரைச் சோ்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (32), பழங்காநத்தத்தைச் சோ்ந்த தவமணி மகன் சக்திவேல் (21), ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த பாண்டி மகன் கருப்பசாமி (21) ஆகியோா் எனத் தெரியவந்தது.
மேலும், இவா்கள் சிவகாசி பகுதியில் கொள்ளை, வழிப்பறியல் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நான்கு பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ஆயுதங்கள், காரை பறிமுதல் செய்தனா்.