விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து, இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் காலி குடங்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகரச் செயலா் தனலட்சுமி தலைமை வகித்தாா். தலைவா் உமா மகேஸ்வரி, பொருளாளா் கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் ரேணுகாதேவி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். புதிய குடிநீா் திட்டத்தை தொடங்க வேண்டும். தூய்மைப் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.