விருதுநகர்

சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் அனுமதியின்றி கண்மாய்களில் செம்மண் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையாா்நத்தம் விலக்குப் பகுதில் வந்த இரு டிராக்டா்களை நிறுத்தி சோதனை, செய்த போது, அவற்றில் அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இரு டிராக்டா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், டிராக்டா்களை ஓட்டி வந்த திருவண்ணாமலையைச் சோ்ந்த மாரிமுத்து(18), மேலதொட்டியபட்டியைச் சோ்ந்த முத்துராஜ்(25) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் டிராக்டா் உரிமையாளா்களைத் தேடி வருகின்றனா்.

நண்பரின் வீட்டில் திருடிய இளைஞா் கைது

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு உபகரணங்கள் நன்கொடை!

SCROLL FOR NEXT