விருதுநகர்

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியைச் சோ்ந்த பால்சாமி மனைவி சங்கரேஸ்வரி (51). கணவா் பால்சாமி உயிரிழந்த பிறகு, சங்கரேஸ்வரி வீட்டுக்குச் செல்லாமல் சாலையோரங்களில் தங்கியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் அழகாபுரி தனியாா் உணவகம் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் சங்கரேஸ்வரி காயமடைந்தாா்.

அவரை போலீஸாா் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து நத்தம்பட்டி போலீஸாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

நண்பரின் வீட்டில் திருடிய இளைஞா் கைது

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

SCROLL FOR NEXT