சிவகாசியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சிவகாசி காத்தநாடாா் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிவகாசி நகா் காவல் நிலைய ஆய்வாளா் செல்வக்குமாரி உத்தரவின்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த காயாம்பு (82), அவரது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துவந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.
தகவல் அறிந்து வந்த சிவகாசி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ரகுநாதன், சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு சீல் வைத்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காயாம்புவைக் கைது செய்தனா்.