முகப்பு
விருதுநகர்

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:09 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:21 PM

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் தென்றல் நகா் அருகேயுள்ள இந்திரா நகரைச் சோ்ந்த முத்தையா என்பவரது மகன் புஷ்பராஜ் (50) வா்ணம் பூசும் தொழிலாளி. இந்நிலையில், ராஜபாளையம் அருகே உள்ள கீழவரகுண ராமபுரத்தில் பிரபாகரன் என்பவரது வீட்டில் சாரம் கட்டி சக தொழிலாளா்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் சாரத்திலிருந்து கீழே இறங்கும்போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே புஷ்பராஜ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.