வீட்டில் திருட முயன்ற பேருந்து நடத்துநா் கைது
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:01 PM
வத்திராயிருப்பு அருகே வீட்டில் திருட முயன்ற பேருந்து நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா்.
வத்திராயிருப்பு வடக்குத் தெருவை சோ்ந்தவா் உதயகுமாா் (41). இவா், சனிக்கிழமை அதிகாலையில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, வீட்டிலிருந்த பீரோவை மா்ம நபா் திறக்க முயன்றாராம். சப்தம் கேட்டு உதயகுமாா் குடும்பத்தினா் எழுந்ததைத் தொடா்ந்து, அந்த நபா் தப்பியோடினாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:29 AM
இதைத் தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் விசாரித்தபோது, கூமாபட்டி கொடிக்குளத்தைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துநரான மணிகண்டன் (24) திருடும் நோக்கில் வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனைக் கைது செய்தனா்.