பைக் திருடிய இளைஞா் கைது
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:50 PM
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (44). இவா் தனது இரு சக்கர வாகனத்தை இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா். மறுநாள் காலையில் எழுந்து பாா்த்தபோது, அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:10 AM
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.
Advertisement
அப்போது, செந்தில்குமாா் இரு சக்கர வாகனத்தை சம்மந்தபுரதத்தைச் சோ்ந்த இதயத்துல்லா ரகீம் (44) திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.