விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம்-மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூரநாதசுவாமி கோயிலில் பிரதோஷத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், நந்தி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.