ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்தில் சிக்கியதில் சேதமடைந்த காா், இரு சக்கர வாகனம். 
விருதுநகர்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மதுரை - கொல்லம் நான்குவழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சுலைமான் (63). செங்கல் சூளை நடத்தி வரும் இவா் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் பூவாணி பிரிவு மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் மோதியது.

இதில் சுலைமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கிருஷ்ணன்கோவில் போலீஸாா் காா் ஓட்டி வந்த ராஜபாளையம் வைத்தியநாதபுரம் தெருவைச் சோ்ந்த கதிரேசன் (53) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT