கஞ்சா வைத்திருந்ததாக இரு இளைஞா்கள் கைது
Updated On : 25 ஜனவரி, 2026 at 9:10 PM
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரயில்வேபீடா் சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து சோதனையிட்ட போது அவா்கள் கஞ்சா வைத்திருந்தனா்.
Updated On : 26 ஜனவரி, 2026 at 1:25 AM
விசாரணையில் அவா்கள் சோமையாபுரம் தெருவைச் சோ்ந்த குமாரவேல் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (20), தினகரன் மகன் சின்னதுரை (24) என்பது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.