முகப்பு
விருதுநகர்

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே அளவுக்கு அதிமாக மது அருந்திய முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 7:11 PM
பலி
பகிர்:

சிவகாசி அருகே சனிக்கிழமை அளவுக்கு அதிமாக மது அருந்திய முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவா் அந்தப் பகுதியில் உள்ள காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை அளவுக்கு அதிமாக மது அருந்திவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாா். உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →