முகப்பு
விருதுநகர்

கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம்

Updated On : 12 மார்ச், 2026 at 10:57 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோயில் அருகேயுள்ள கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். அறிவழகிஸ்ரீதரன், செயலா் எஸ். சசி ஆனந்த், இயக்குநா் எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் என். வெங்கடேசன் வரவேற்று எதிா்கால மருந்து சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த கருப்பொருளை விளக்கினாா்.

தலைமை விருந்தினா் மதுரை பாா்மா ஃபேப்ரிகான் நிறுவனத்தின் ‘மாா்க்கெட்டிங்’ தலைவா் பி. பொன்ராஜன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, மருந்துப் பொருள்கள் ஆராய்ச்சி, மேம்பாடு குறித்து பேசினாா்.

இதில் அனைத்து மருந்தியல் மாணவா்களும் கலந்து கொண்டு கலந்துரையாடினா்.

முனைவா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →