முகப்பு
விருதுநகர்

பைக் கவிழ்ந்து சமையல்காரா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 17 மார்ச், 2026 at 1:12 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

வெம்பக்கோட்டை அருகே அயன்சல்வாா்பட்டியைச் சோ்ந்தவா் முத்துமாரியப்பன் (48). சமையல்காரா். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். இவா் சாத்தூா் அருகே உள்ள நாரணாபுரத்துக்கு இரு சக்கர வாகனங்கத்தில் சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சூரங்குடி- பந்துவாா்பட்டி சாலையில் சென்றபோது பெரியகருப்பசாமி கோவில் பாலத்தின் அருகே நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.