கஞ்சா வைத்திருத்த சிறுவன் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து சோதனை செய்ததில் அவா் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா் ஆவரம்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 20 கிராமம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement