தினமணி கதிர்

திரைக்கதிர்: ஐந்து நிமிடம் தவறினால்.. அடுத்த காட்சி புரியாது!

வித்தியாசமான படங்களைத் தயாரித்து வரும் எஸ்.பி.பி.சரணின் அடுத்த தயாரிப்பு "நாணயம்'. பிரசன்னா, ராகிணி நடிக்கும் இந்தப் படத்தில் சிபிராஜ் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார். மிஷ்கின் உதவியாளர் சக்தி எஸ்.ர

மனோஜ் கிருஷ்ணா

வித்தியாசமான படங்களைத் தயாரித்து வரும் எஸ்.பி.பி.சரணின் அடுத்த தயாரிப்பு "நாணயம்'. பிரசன்னா, ராகிணி நடிக்கும் இந்தப் படத்தில் சிபிராஜ் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார். மிஷ்கின் உதவியாளர் சக்தி எஸ்.ராஜா படத்தை இயக்குகிறார். ஒரு வங்கியில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றிய இந்தக் கதையில் மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள். இந்தப் படத்துக்காக 70 லட்சம் ரூபாய் செலவில் ஒரு வங்கி "செட்' அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ""எந்த ஒரு ஹாலிவுட் படத்தையும் பார்த்து உருவாக்கிய கதை அல்ல. படத்தின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு காட்சியும் புதுமையாக இருக்கும். ஒரு ஐந்து நிமிட காட்சிகளைப் பார்க்கத் தவறினால் கூட அடுத்து வரும் காட்சிகளைப் புரிந்து கொள்வது சிரமம். மற்றபடி இது நல்ல படமா, இல்லையா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT