கரண் நடித்த "காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கைதுரை, அடுத்து "காந்தர்வன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி கேட்டபோது...
""இது ஒரு காதல் கதைதான் என்றாலும் வழக்கமான காதல் இருக்காது. இந்தப் படத்தைப் பார்க்கும் இளம் பெண்கள் இது போன்ற ஒரு காதலன் தன் எதிரிக்குக் கூட கிடைத்துவிடக் கூடாது என எண்ணுவர். அந்த அளவுக்கு காதலன் வேடத்தை மிகவும் வெறுக்கத்தக்க அளவுக்கு உருவாக்கியிருக்கிறோம். அவன் ஏன் அப்படி நடந்துகொள்கிறான் என்பதை யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறோம். இந்தப் படம் வெளிவந்த பிறகு காதலைப் பற்றிய ரசிகர்களின் மதிப்பீடு மாறும்'' என்கிறார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.