கூத்துக்கு வயது 400
கேரளாவின் கதகளியைப் போல், கர்நாடகத்தின் யக்ஷகானத்தைப் போல், ஆந்திரத்தின் வீதி நாடகத்தைப் போல்,
கேரளாவின் கதகளியைப் போல், கர்நாடகத்தின் யக்ஷகானத்தைப் போல், ஆந்திரத்தின் வீதி நாடகத்தைப் போல், உத்தரப் பிரதேசத்தின் நௌடங்கியைப் போல், மகாராஷ்டிரத்தின் தமாஷாவைப் போல், அஸ்ஸôமின் ஆங்கியநாட்டைப்போல் தமிழ்நாட்டுக்குத் தெருக்கூத்து ஆகும்.
செஞ்சியை ஆண்ட மன்னன் மகாபாரதக் கூத்துக்கு ஆதரவளித்ததாகவும், கூத்தின் வயது 400 என்றும் கடலூர் மாவட்ட தெருக் கூத்துக் கலைஞர்கள் சங்கத்தின் வெளியீடான " என்றும் வாழும் தெருக் கூத்து' என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செஞ்சிப் பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் முன்புதான் கூத்து நிகழ்த்தப்பட்டதாம். இன்றும் தெருக்கூத்து நடக்கும் ஊரில் திரௌபதி அம்மன் கோயில் இல்லை என்றால் செஞ்சிக்குச் சென்று அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துவந்து அதை ஆடுகளத்தின் முன்னால் வைத்தபிறகே தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.
("முகிலின் நாடும் நமது கலைகளும்' நூலிலிருந்து)