* மாப்பிள்ளை: என்ன மாமா மோதிரத்திலே கூழாங்கல் பதிச்சிருக்கு?
மாமனார்: நீங்கதானே மாப்பிள்ளை கல் பதிச்ச மோதிரம் வேணும்னு கேட்டீங்க?
* அவர்: என்னப்பா சர்வர், பேப்பர் மசாலா இவ்வளவு அழுக்கா இருக்கு?
சர்வர்: இது "வேஸ்ட் பேப்பர்' மசாலா சார்.
ப.சரவணன்,
ஸ்ரீரங்கம்.
* (ஈரோடு வீதியில் இருவர்)
"என் ராசிக்கு "மகிழ்ச்சி'ணு போட்டிருக்கு!'
"அதுக்காக என்கிட்டே கடன் கேக்கலாம்னு பாக்கிறியா. என் ராசிக்கு "ஜாக்கிரதை'ன்னு போட்டிருக்கே!'
மா.மாரிமுத்து, ஈரோடு.
* மகள்: நாளைக்குக் காலையிலே வேலைக்காரி வரமாட்டாங்கிறீயே. போகும்போது எதுவும் சொல்லலையே?
தாயார்: வாசலில் அவள் போட்டிருக்கற கோலத்தைப் போய்ப் பாரு. கீழே மூணு பெருக்கல் குறி போட்டிருக்கா. மூணு நாள் வரமாட்டான்னு புரிஞ்சுக்கணும்.
க.ரத்னம், கோயமுத்தூர்.
* இவர்: என் மனைவி இரண்டும் கெட்டான்...!
அவர்: ஏன் அப்படி?
இவர்: முழு மனசோட சமைச்சா உப்பு கூட போயிடுது, அரை மனசோட சமைச்சா உப்பே இல்லாமப் போயிடுதே..!
ஆர்.சீதாராமன்,
சீர்காழி
* அவன்: ஸ்வீட் கடைக்கு ஆள் தேவைன்னு போனியே. திரும்பி வந்துட்ட. என்னாச்சி?
இவன்: சுகர் பேஷண்ட்தான் வேணுமாம்.
செ.மயில்,
திருநெல்வேலி.