1984 - ஆம் ஆண்டு சச்சினுக்கு 11 வயது கிரிக்கெட் விளையாடிவிட்டு, கையில் கிரிக்கெட் பேட்டுடன் ரயில்வே டிராக்கில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென ரயில்எஞ்சின் சத்தம் கேட்டு நிமிர்ந்தவருக்கு அதிர்ச்சி. அதே டிராக்கில் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அடுத்த டிராக்குக்கு செல்லலாம் என்றால் அந்த திசையிலும் ரயில் வந்து கொண்டிருந்தது. உடனே சென்று கொண்டிருந்த டிராக்கை விட்டு இறங்கி அதே சமயம் அடுத்த டிராக்குக்கு இடையில், கூனிக் குறுகி நின்று கொண்டார். அருகே இருந்த இரு டிராக்கிலும் ரயில்கள் ஓடிக் கடந்தன. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அடிபடவில்லை.
சாதனை வீரர் சச்சின் நூலிலிருந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.