தகழியின் காத்தா...
மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் வாழ்க்கை தற்போது ஒரு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் "தகழியின் காத்தா''.
மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் வாழ்க்கை தற்போது ஒரு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் "தகழியின் காத்தா''.
தகழியின் வாழ்க்கையையும் அவரின் எழுத்துகளையும் மிகவும் நேசித்த பெண்மணி காத்தா.
அவரை "காத்தே' என்று அன்புடன் அழைப்பார் தகழி. தகழி காலமானதற்குப் பிறகு அவரது இல்லத்தை நினைவு இல்லமாக கேரள மாநில அரசு எடுத்துக்கொண்டது. அப்போதும் காத்தா மாத வாடகையில் அங்கேயே வாழ்ந்து வந்தார். காத்தாவின் பிள்ளைகள் அவரை தங்களுடன் வரும்படிக் கட்டாயப்படுத்தியும் காத்தா மறுத்துவிட்டார்.
அன்றைய ஏகாந்த வாழ்க்கையில் தகழியைக் குறித்த தம் நினைவுகளை விவரித்திருந்தார் காத்தா. இந்த நினைவுகளே இப்போது மலையாளத்தில் திரைப்படமாகிறது.
காத்தா கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுப்பவர் காத்தாவின் இளைய மகள் ஐமதினகா. பிரபல நடிகர் பி.ஜெயப்பிரகாஷ் தகழியாக நடிக்கிறார். தகழியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.