தினமணி கதிர்

தந்தை நூலுக்கு மகன் முன்னுரை!

DIN

பிரபல நடிகர் ரிஷிகபூர், தற்போது ன்ய்ஸ்ரீங்ய்ள்ர்ழ்ங்க் என்ற  நூலை மீனா ஐயருடன் சேர்ந்து  எழுதியுள்ளார்:
 இந்த நூலுக்கு ரிஷிகபூரின் மகனும் பிரபல நடிகருமான ரன்வீர்கபூர் முன்னுரை எழுதியுள்ளார். அதிலிருந்து:
 "நான் என் அம்மாவிடம்தான் நெருக்கம். அப்பாவிடம், ஓர் எல்லையை எப்போதும் தாண்டியதில்லை. அவருடன் நெருங்கிப் பழக எண்ணியது உண்டு. ஆனால் அது நடந்ததில்லை. என் அப்பாவும், என்னிடம் ரொம்ப நெருங்கியதில்லை. வருங்காலத்தில் எனக்குத் திருமணமாகி, குழந்தைகள் பிறந்தால், நான் இப்படியிருக்க மாட்டேன். குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவேன்.''
 தந்தை ரிஷிகபூரின் டுவிட்டர் பக்கத்தில் அவர் அடிக்கும் கமெண்டுகள். சில சமயம் கடும் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளன. இதுபற்றி ரிஷிகபூரின் மகன் ரன்வீர்கபூர் கூறுவது என்ன?
 "என்னுடைய அப்பா. ஒரு நேரடி அம்பு,  அதன்தாக்கம் அதிகம். அப்பா மனதில் எந்த திட்டமோ, ரகசியமோ கிடையாது. ஆக எதனையும் எதிர்கொள்ள அவர் தயார்.''
 - ராஜிராதா, பெங்களூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT