திருவானைக்காவலில் பாவேந்தர் பாரதிதாசனின் மணிவிழா 30.4.1951- இல் நடந்தபோது, மகாகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் திருச்சியில்
தங்கியிருப்பதை அறிந்து கவிஞர். திருலோக சீதாராமுடன் சென்று செல்லம்மாளை விழுந்து வணங்கினார்.
பாரதியாரின் துணைவியார், "யாரு சுப்புரத்தினமா? மொரட்டுப்பயலாச்சே? பிள்ளைகுட்டி நாலஞ்சு ஆயிருச்சு இல்ல. இன்னும் மொரட்டுத் தனமா இருக்காதே'' என்று கூற பாவேந்தர் "இல்லையம்மா'' என்று பணிவாக கூறினார்.
( டாக்டர் மா. அண்ணாதுரையின் "பாவேந்தர் பாரதிதாசன்' என்ற நூலிலிருந்து)
- கோட்டை செல்வம்