தினமணி கதிர்

என்ன மந்திரம் போட்டாளோ!

தினமணி

எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும்
 வனக்கிளி அவளை இன்னும் மறக்கவே முடிய வில்லை!
 நினைக்கையில் இனிக்கும் அந்த நெய்வாசக் குழலி இன்று
 எனக்கொரு கவிதையானாள்; இதுதான் நான் கண்ட இன்பம் !
 கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
 மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள் !
 பன்னி நான் கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள் !
 சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரம் என்றாள்
 தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள் - மின்னும்
 அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் - நானும்
 பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன் - என்ன
 மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்.
 -கவிஞர் கண்ணதாசன்
 ("வனவாசம்' எழதியதற்குப் பின்னர் எழுதிய கவிதை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT