நடையழகு!
சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரம் சிவாஜியின் நெருங்கிய நண்பரும் ரசிகரும் ஆவார். அவர் சிவாஜியை ஒருமுறை புட்டபர்த்திக்கு அழைத்துச் சென்றார்.
சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரம் சிவாஜியின் நெருங்கிய நண்பரும் ரசிகரும் ஆவார். அவர் சிவாஜியை ஒருமுறை புட்டபர்த்திக்கு அழைத்துச் சென்றார்.
புட்டபர்த்தி சென்றபோது பொது நுழைவு வாசல் அருகே, சிறிது நேரம் அவர்களை உட்காரவைத்து பின் அழைத்து சென்றனர். நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பிரத்யேக வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
புட்டபர்த்தி சாய்பாபாவிடம் இருவரும் சென்றபோது பாபா தெலுங்கில் , ""மெயின் நுழைவு வாயிலிலிருந்து நடக்க வைத்து விட்டேனே என்று கோபம்தானே உனக்கு. சிவாஜியின் நடிப்பில் ரொம்ப ரசிக்கத்தக்கது அவருடைய நடைதான் என்று எல்லாரும் சொன்னார்கள். எனக்கு உன் நடையை பார்க்கணும்னு ஆசை. அதனால் தான் உன்னை இவ்வளவு தூரம் நடக்க வைத்தேன்'' என்றார்.
சிவாஜிக்கு தெலுங்கு நன்றாகப்புரியும். பாபா சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து விட்டார்.